பக்கச்சுவர் அமைக்கப்படுமா?

Update: 2024-04-07 08:19 GMT

இரவிபுதூர் கிராமத்தில் ஈராக் கொல்லிகுளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கும், துணி துவைப்பது என பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த குளத்தின் கரையில் உடைப்பு ஏற்பட்டு ஏராளமான தண்ணீர் வெளியேறியது. அந்த பகுதி வாலிபர்கள் சிலர் கல், மண் வைத்து உடைப்பை தற்காலிகமாக சீரமைத்தனர். குளத்தின் கரையில் பக்கச்சுவர் அமைக்காததால் உடைப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி அந்த குளத்தின் கரையில் பக்கச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்