கூவமாக மாறி வரும் பாளையங்காலவாய்

Update: 2024-03-31 17:28 GMT
நெல்லை பாளையங்கால்வாயில் கடந்த ஆண்டு தூர்வாரும் பணி நடந்தது. ஆனால் பணி அரைகுறையாக விடப்பட்டதுடன், கால்வாயில் தேங்கி கிடந்த கழிவுகள் கால்வாயின் ஓரத்திலேயே குவித்து வைக்கப்பட்டு இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையில் அந்த கழிவுகள் கால்வாயில் கலந்து கிடப்பதுடன், தண்ணீர் முறையாக வழிந்தோட வழியின்றி கிடக்கிறது. கூவமாக மாறி வரும் இந்த கால்வாயை முறையாக மராமத்து செய்வதுடன், கழிவுகள் கலக்காமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்