ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2024-03-31 17:25 GMT
புதுப்பேட்டை அருகே சிறுவத்தூரில் உள்ள ஏரி தூர்ந்துபோய் கிடக்கிறது. மேலும் ஏரி மற்றும் நீர்வரத்து வாய்க்காலை பலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது. இதை தவிர்க்க ஏரி மற்றும் நீர்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றி துர்வார வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்