சுகாதார நிலைய கட்டிடபணி எப்போது முடியும்

Update: 2024-03-31 17:11 GMT
சின்னசேலம் அருகே பாக்கம்பாடியில் துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. முறையான கட்டிட வசதி இல்லாததால் அங்கு துணை சுகாதார நிலையத்தின் செயல்பாடு நிறுத்தப்பட்டது. கிராம மக்கள் நலன் கருதி துணை சுகாதார நிலையத்துக்கு அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுவதால், அப்பகுதி மக்கள், கர்ப்பிணிகள் சிகிச்சை பெற நீண்ட தூரம் உள்ள சின்னசேலத்துக்கு சென்று வருகிறார்கள். எனவே கட்டிட பணியை விரைந்து முடித்து துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

மேலும் செய்திகள்