சீரமைக்கப்பட்டது

Update: 2024-03-31 07:32 GMT

நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் அண்ணா பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ்நிலையத்தில் முகப்பு பகுதியில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் ‘அண்ணா பேருந்து நிலையம், நாகர்கோவில் மாநகராட்சி’ என மின்விளக்குகளால் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நாக‘ர்’ என்ற எழுத்தில் புள்ளியில் மின்விளக்கு ஒளிராமல் காணப்பட்டது. இதுபற்றி தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பெயர் பலகையில் பழுதான மின்விளக்கை சீரமைத்து ஒளிர வைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்