பக்தர்கள் அவதி

Update: 2024-03-24 11:55 GMT
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா தா.பேட்டை அருகே தலைமலையில் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் கோவிலின் அடிவாரத்தில் இருந்து உச்சிக்கு செல்லும் வரை சுமார் கிலோ மீட்டர் தூரம் கரடு முரடாக உள்ளது. இதனால் கோவிலுக்கு நடந்து செல்லும் பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்