ஆபத்தான நிலையில் அரசு கட்டிட சுற்றுச்சுவர்

Update: 2024-03-24 10:15 GMT

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட நாகை சாலை பகுதி தபால் நிலையம் அருகே பொதுப்பணித்துறை அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் சுற்றுச்சுவரில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விரிசல்கள் ஏற்பட்டு உள்ளது. இதனால் சுற்றுச்சுவர் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் வகையில் ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் உள்ள அரசு கட்டிட சுற்றுச்சுவரை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்