சீரமைக்கப்படுமா?

Update: 2024-03-24 07:56 GMT

நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் அண்ணா பஸ்நிலையம் உள்ளது. இந்த பஸ்நிலையத்தில் முகப்பு பகுதியில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் ‘அண்ணா பஸ்நிலையம், நாகர்கோவில் மாநகராட்சி’ என மின்விளக்குகளால் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நாக‘ர்’ என்ற எழுத்தில் புள்ளியில் மின்விளக்கு பழுதடைந்து ஒளிராமல் காணப்படுகிறது. இதை படிக்கும்போது நாகாகோவில் என தவறாக வாசிக்கும் வகையில் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்விளக்கு சீரமைக்கப்படுமா?.

மேலும் செய்திகள்