புகைமூட்டத்தால் மக்கள் அவதி

Update: 2024-03-17 17:54 GMT
பண்ருட்டி விழமங்கலம் சாலையில் அரசு பள்ளி அருகில் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிப்பதால் அதில் இருந்து வெளியேறும் புகைமூட்டத்தால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் புகையால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் விபத்து ஏற்படும் நிலையும் உள்ளது. எனவே சாலையோரம் குப்பைகளை தீவைத்து எரிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்