நோயாளிகள் அவதி

Update: 2024-03-17 14:24 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இரவு நேரங்களில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் தங்கி சிகிச்சை அளிக்காததால் இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் உடல்நிலை சரியில்லை என்றால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் பணியாற்ற டாக்டர்களை நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்