நாய்கள் தொல்லை

Update: 2024-03-17 08:09 GMT

தர்மபுரம் ஊராட்சிக்குட்பட்ட புதூரில் பகுதியில் தெருநாய்கள் அதிகளவில் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. அவை சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளை விரட்டி கடிக்க முயற்சிப்பதும், சாலையின் குறுக்கே திடீரென பாய்வதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சூர்யா, புதூர்.

மேலும் செய்திகள்