மதுப்பிரியர்களால் தொல்லை

Update: 2024-03-10 16:45 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தினமும் மாலை 6 மணி முதல் இரவு வரை மதுப்பிரியர்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் மாலை நேர மதுபாராக மஞ்சக்குப்பம் மைதானம் மாறி வருகிறது. இதில் சிலர் போதை தலைக்கேறியதும் அந்த வழியாக தனியாக செல்லும் பெண்களை கேலி செய்வதால் அவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே மதுப்பிரியர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்