மாடுகளால் அவதி

Update: 2024-03-10 13:37 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பம்மல் பகுதியில் பிரபாகரன் தெரு மற்றும் ராஜா தெருவில் அதிகளவில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தெருக்களில் நடமாட முடியாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைகின்றனர். மேலும், இப்பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை முட்டுவதற்கு துரத்துவதால் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்