இலவச கழிப்பிடம் பராமரிக்கப்படுமா?

Update: 2024-03-10 13:27 GMT

செங்கல்பட்டு மாவட்டம், ரெயில் நிலையம் அருகே புதிய பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில், சிலர் பொது இடங்களிலும், சுவர் ஓரங்களிலும் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள இலவச கழிப்பிடங்களை சரியான முறையில் பராமரிப்பதுடன் பொது வெளிகளில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு அபாராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்