சென்னை ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் ரோடு காவேரி ஆஸ்பத்திரி அருகே ஒரு பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையில் பயணிகள் உட்காரும் இருக்கைகள் மற்றும் மேற்கூரைகள் சேதமடைந்து இருக்கிறது. இந்த இருக்கைகளில் அமர முடியாமல் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் சாலையில் நின்று பஸ் ஏறி செல்லும் அவல நிலை உள்ளது. எனவே, சேதமடைந்த இருக்கைகளை மாற்றி தர, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.