புகார் எதிரொலி

Update: 2024-03-10 11:09 GMT

சென்னை தரமணி, பெரியார் நகர் கென்னடி தெருவில் நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேறும் குழாய் சேதமடைந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் மாநகராட்சி அதிகாரிகள் சேதமடைந்த கழிவுநீர் குழாயை சரிசெய்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற 'தினத்தந்தி'-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்