செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரம் ரெயில் நியைலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். ஆனால், ரெயில் நிலையத்தில் உள்ள தானியங்கி படிக்கட்டுகள் (எஸ்குலேட்டர்) அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. இதனால், ரெயில் நிலையத்திற்கு வரும் முதியவர்கள் படி வழியாக ஏற, இறங்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, ரெயில்வே நிர்வாகம் பழுதடைந்து கிடக்கும் தானியங்கி படிக்கட்டுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.