செங்கல்பட்டு மாவட்டம், சேலையூர் கேம்ப் ரோட்டிலிருந்து அகரம் தென் சாலைக்கு செல்லும் வழியில் சிறிய பாலம் உள்ளது. இந்த பாலத்திலிருந்து கீழே இறங்கும் பகுதி மிகவும் பள்ளமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் பாலத்திலிருந்து கீழே இறங்கும் சாலையை சிறதளவு உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.