செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூர் சுவாமிநகர் மெயின் ரோடு பகுதிகளில் தெருநாய்கள் அதிகமாக உள்ளது. இதனால், அந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், பொதுமக்கள் இரவு நேரங்களில் அந்த பகுதி வழியாக செல்லும்போது கடிப்பதற்கு துரத்துக்கிறது. இதனால், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரையில் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.