பாலத்தில் முளைத்துள்ள மரம்

Update: 2024-03-03 11:46 GMT

திருச்சி மாவட்டம் லால்குடி ரோடு மேலவாளாடி மேம்பாலத்தில் சாலை ஓரம் மண்கள் தேங்கிய நிலையில் செடிகள் மற்றும் மர கன்று வளர்ந்து காணப்படுகிறது. இதனால் மரக்கன்று வளர வளர பாலம் கலப்போக்கில் வலுவிழந்து இடிந்து விழும் அபாயம் உள்ளது. மேலும் இரவு நேரத்தில் இந்த பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்