சிதிலமடைந்த சுகாதார வளாகம்

Update: 2024-03-03 11:44 GMT

புதுக்கோட்டை ஒன்றியம், வளவம்பட்டி ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பெண்களின் நலன் கருதி இப்பகுதியில் மகளிர் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து, கதவுகள் இன்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்