புதிய ரேஷன் கடை எப்போது திறக்கப்படும்

Update: 2024-02-25 18:15 GMT
சிதம்பரம் அருகே சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிவஜோதி நகரில் ரூ.11 லட்சத்தில் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. இருப்பினும் இதுவரை அந்த ரேஷன் கடையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த கட்டிடம் சேதமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே மக்கள் வரிப்பணம் வீணாவதற்குள் புதிய ரேஷன் கடை கட்டிடத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்