சென்னை மதுரவாயல், காமராஜ் சாலை பெரியார் நகரில் கழுவுநீர் கால்வாய் மூடி சேதம் அடைந்து இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வந்து கழிவுநீர் மூடியை சரி செய்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.