செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் -கூடுவாஞ்சேரி நெல்லிக்குப்பம் ரோடு பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பகுதியில் உள்ள நடைபாதையில் கடைகள் வைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் பஸ் ஏறுவதற்காக சாலையில் நின்று ஏறும் அவலநிலை உள்ளது. மேலும், அந்த பகுதியில் பஸ் நிறுத்தம் இல்லாததால் மாணவ- மாணவியர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.