ஆட்டையாம்பட்டி-காகாபாளையம் பிரதான சாலையோரம் தானகுட்டிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி திறந்தவெளியில் இயங்கி வருகிறது. இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு நுழைவு வாயில் அமைக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் ஆபத்தை உணராமல் சாலையோரம் விளையாடுகின்றனர். மேலும் பள்ளி வளாகத்திற்குள் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளிக்கு நுழைவுவாயில் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?