கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் குறுக்குச் சாலை வழியாக தினமும் கரூர், ஈரோடு, வேலூர் போன்ற நகரங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளிச் மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்கள் திடீரென வாகனங்களையும், நடந்து செல்வோரையும் துரத்துவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதியில் பெருகி வரும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.