மூடிக்கிடக்கும் சுகாதார வளாகம்

Update: 2026-07-12 14:06 GMT

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் ஆண்டகளூர் கேட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுகாதார வளாகம் கட்டப்பட்டு பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக பொதுக்கழிப்பிடம் திறக்காமல் மூடியே கிடக்கிறது. இதனால் கல்லூரி மாணவ, மாணவிகள், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் உடனடியாக சுகாதார வளாகத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று ஊராட்சி மன்ற நிர்வாகத்தை பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்