புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுவதால், தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் வந்து செல்கின்றனர். இவ்வளவு பரபரப்பான இந்த பஸ் நிலையத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஒரே ஒரு ஏ.டி.எம். எந்திரம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. அதுவும் பெரும்பாலான நேரங்களில் பணம் இல்லாமல் முடங்கிப் போவதால், அவசரத் தேவைக்குக் கூட பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, அறந்தாங்கி பஸ் நிலையத்தில் கூடுதல் ஏ.டி.எம். எந்திரங்களை நிறுவ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.