சின்னாளப்பட்டி நகரின் முக்கிய நீர் ஆதாரமாக தம்பித்தோட்டம் குளத்துக்கரை விளங்குகிறது. தற்போது இந்த குளத்தில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் குளத்தில் தண்ணீர் தேக்கமுடியாத நிலை ஏற்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்துக்கு செல்லும் அபாயம் உள்ளது. எனவே கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்.