மதுபான பாராக மாறிய பயணிகள் நிழற்குடை

Update: 2026-07-12 15:58 GMT

பெரியகுளம் வேல்நகரில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையின் மேற்கூரை சேதமடைந்து வருகிறது. இதற்கிடையே இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மதுபான பாராக நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன் மதுபாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் பஸ் நிறுத்தத்துக்கு வரும் பயணிகள், நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடையின் மேற்கூரையை சீரமைப்பதுடன், மதுபான பாராக மாற்றும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்