தென்காசி- அம்பை புறவழிச்சாலையில் கடையத்தில் இருந்து புலவனூர்- வெய்க்காலிப்பட்டி சாலையை இணைக்கும் ரோடு புதிதாக அமைக்கப்பட்டது. இங்கு சாலை பிரியும் இடத்தில் சரியான வழிகாட்டுப் பலகையோ, மின்விளக்குகளோ இல்லை. இதனால் பயணிகள் வழி தெரியாமல் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு வழிகாட்டு பலகை, மின்விளக்கு அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.