பஸ் நிறுத்தம் வேண்டும்

Update: 2026-07-12 17:26 GMT

சாத்தான்குளம் அருகே ஆனந்தபுரம் ரஞ்சி ஆரோன் மேல்நிலைப்பள்ளி முன்பு எந்த பஸ்களும் நிற்பது இல்லை. இதனால் மாணவர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து பள்ளிக்கு செல்வதால் அவதிப்படுகின்றனர். எனவே காலை, மாலையில் பள்ளிக்கூடம் அருகில் பஸ்கள் நின்று சென்றால் மாணவர்களுக்கு எளிதாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்