கழிவுநீர் அகற்றும் வாகனம் வேண்டும்

Update: 2024-02-18 11:21 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி நல்ல வியாபார ஸ்தலமாக உள்ளது. இங்கு ஏராளமான ஓட்டல்கள், டீக்கடைகள், குளிர்பான கடைகள் உள்ளன. பேரூராட்சி பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் இல்லாததால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை பேரூராட்சி சார்பில் கழிவுநீர் அகற்றும் வாகனம் மூலம் இந்த கடைகளில் இருந்து கழிவுநீரை தினமும் எடுத்து செல்லுவது வழக்கம். இதற்காக 6 மாதங்களுக்கு ஒரு முறை கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் சிறு வியாபாரிகள் பலன் பெற்றனர். சுகாதாரமும் பேணப்பட்டது. ஆனால் தற்போது கழிவுநீர் வாகனம் இயக்கப்படாததால் வணிக நிறுவனங்களின் கழிவுநீரை சாலையில் திறந்துவிடுகின்றனர். இதனால் சுகாதாரகேடு உருவாகிறது. எனவே நிறுத்தப்பட்ட கழிவுநீர் அகற்றும் வாகனத்தை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்