போலீஸ் நிலையம் செல்ல அச்சம்

Update: 2024-02-18 10:53 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டையில் மகளிர் போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையம் தன்னந்தனியாக காட்டுக்குள் இருப்பதினால் இரவு நேரங்களில் போலீசார் பதட்டமான நிலையிலயே பணி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க செல்லும் பொதுமக்கள் பெரிதும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் போலீஸ் நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் இல்லாத நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, இந்த போலீஸ் நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைப்பதுடன், உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்