சிதிலமடைந்த கல்லூரி நுழைவு வாயில்

Update: 2024-02-11 17:40 GMT

திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே அரசு கலைக்கல்லூரி மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரியின் முகப்பு நுழைவாயிலின் மேற்பகுதி விரிசல் ஏற்பட்டு சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. மாணவ-மாணவிகள் நடமாட்டத்தின்போது இந்த நுழைவுவாயில் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்