நாய்கள் தொல்லை

Update: 2024-02-11 17:36 GMT
திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இரவு நேரங்களில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையத்திற்கு நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் நாய்கள் கடிப்பதற்கு துரத்துகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நாய்களை பிடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்