பள்ளி மாணவிகள் அச்சம்

Update: 2024-02-11 13:30 GMT

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள தலைமலைப்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தலைமலைப்பட்டி, மேய்க்கல் நாயக்கன்பட்டி, களத்தூர், சேர்வைக்காரன்பட்டி, வாழவந்தி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் தினமும் காலையில் பள்ளிக்கு வரும்போதும், மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போதும் மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் சிலர் மதுபோதையில் கும்பலாக மாணவிகளை பின்தொடர்ந்து கிண்டல் செய்கின்றனர். இதனால் மாணவிகள் அச்சத்துடனே பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதனால் மாணவிகளின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்