காட்சி பொருளான கண்காணிப்பு கேமராக்கள்

Update: 2024-02-04 17:25 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் தற்போது அவை பழுதடைந்து தலைகீழாக தொங்கியபடி காட்சி பொருளாகி மாறி உள்ளது. அடுத்த மாதம் பாலக்கோட்டில் நடைபெறும் புதூர் பொன் மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில், பொதுமக்கள் நலன்கருதி, உடனடியாக மாவட்ட நிர்வாகம் செயலிழந்த கண்காணிப்பு கேமராக்களை சரி செய்து பயன்பாட்டிற்க்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜ்குமார், பாலகோடு.

மேலும் செய்திகள்