நாய்கள் தொல்லை

Update: 2024-02-04 16:40 GMT

திண்டுக்கல் லட்சுமிசுந்தரம் காலனி, சிவா நகரில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக செல்லும் சிறுவர்-சிறுமிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட நாய்கள் கடித்து சிலர் காயமடைந்தனர். இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடமாடவே அச்சப்படுகின்றனர். எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்