அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள்

Update: 2024-02-04 12:55 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பல்லவராயன் பத்தை ஊராட்சியைச் சேர்ந்த ஆத்தியடிபட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு முறையான சாலை வசதி, குடிநீர், மயானச்சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். முறையான சாலை வசதி இல்லாததால் பள்ளி கல்லூரி மாணவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த கிராமத்திற்கு விரைவில் அடிப்படை வசதிகள் செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்