விபத்து அபாயம்

Update: 2024-02-04 08:02 GMT

மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலை அங்காங்கே சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும், மேம்பாலத்தில் இருந்து வரும் மழைநீர் அந்த பள்ளத்தில் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைப்பதுடன், மழைநீர் தேங்காமல் வடிந்தோடவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வினு,குன்னத்தூர்.

மேலும் செய்திகள்