குரங்குகள் தொல்லை

Update: 2024-01-28 13:48 GMT
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மானகிரி சீனிவாசா நகரில் குரங்குகள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. மேலும் வீட்டில் விளையாடி கொண்டிருக்கும் குழந்தைகளை அச்சுறுத்தி கடித்து செல்கின்றது. இந்த குரங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்