தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2024-01-28 12:54 GMT

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா இடையாத்தூர் ஊராட்சி அம்பாள்புரத்தில் இருந்து அம்மாபட்டி வழியாக சடையம்பட்டி இணைப்பு சாலைக்கு செல்லும் இந்த சாலையோரம் காவிரி கூட்டு குடிநீர்தொட்டி மூடி பல்வேறு இடங்களில் திறந்த நிலையில் இருந்தன. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் காவிரி கூட்டு குடிநீர் தொட்டியைமூடி உள்ளனர். இதையடுத்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்