சென்னை கிண்டி, ஆதம்பாக்கம் தலைமை செயலக காலனியில் உள்ள மாநகராட்சி பூங்கா பராமரிப்பு இல்லாமல் மோசமாக இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பூங்காவை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.