கால்நடை மருத்துவமனை தொடங்கப்படுமா?

Update: 2024-01-21 11:52 GMT
காரையூர் அருகே எம்.உசிலம்பட்டி உள்ளது. இதனை சுற்றி சூரப்பட்டி, வடக்கிப்பட்டி, ஆவாம்பட்டி, வெள்ளையக்கவுண்டம்பட்டி, அம்மாபட்டி, பில்லனிவயல், முள்ளிப்பட்டி உட்பட 15-க்கும் மேற்ப்பட்ட கிராம விவசாயிகள் அதிக அளவில் ஆடு, மாடு, கோழி, நாய்கள் என அதிக அளவில் வளர்த்து வருகின்றனர். இவர்கள் பாதிக்கப்பட்ட மாடு, ஆடுகளை சிகிச்சைக்காக காரையூர் அல்லது சடையம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே கால்நடை வளர்பவர்களின் கஷ்டத்தை போக்கவும் மற்றும் கால்நடைகளை பாதுகாக்கவும் எம்.உசிலம்பட்டியில் கால்நடை மருத்துவமனை தொடங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்