நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2024-01-21 08:48 GMT

வெள்ளமோடி பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தின் நுழைவு பகுதியில் உள்ள கால்வாயில் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்களின் குழந்தைகளை அங்கன்வாடிக்கு கொண்டு செல்ல சிரமப்படுகின்றனர். மேலும் குழந்தைகள் கால்வாயில் விழுந்து காயம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்