கடலூர் மஞ்சக்குப்பம் பழைய கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் இருந்த பொது கழிப்பறை கட்டிடம் சேதமடைந்துள்ளதால், அந்த கட்டிடம் மூடப்பட்டது. இதனால் வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வேலை நிமித்தமாக கடலூர் வரும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு, பொது கழிப்பறை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.