மின் மோட்டார் பழுது

Update: 2024-01-14 16:21 GMT

செட்டிநாயக்கன்பட்டியை அடுத்த கள்ளிப்பட்டி அம்பேத்கர் காலனியில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுக்கான மின்மோட்டார் பழுதடைந்துள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக அங்குள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்ப முடியாத நிலை உள்ளது. அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே மின்மோட்டாரை விரைந்து பழுது நீக்க வேண்டும்.


மேலும் செய்திகள்