மோட்டாா்பழுதை சரிசெய்ய வேண்டும்

Update: 2024-01-14 14:30 GMT

கோபி அருகே பொலவக்காளிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகரிலுள்ள தண்ணீர் தொட்டிக்கு ஆழ்துளைக் கிணற்றில் இருந்து தண்ணீர் நிரப்பப்பட்டு வந்தது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மின் மோட்டார் பழுதடைந்த காரணத்தால் தண்ணீர் வருவதில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் தண்ணீர் தொட்டிக்கு மேல் மூடியும் இல்லை. உடனே மின்மோட்டார் பழுதை சரிசெய்து, தொட்டிக்கு மேல் மூடியும் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்