குளம் தூர்வாரப்படுமா?

Update: 2024-01-07 15:36 GMT
சேத்தியாத்தோப்பு அருகே கோதண்டவிளாகம் கிராமத்தில் உள்ள குளம் தூர்ந்துபோய் காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் குளத்தில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க குளத்தை தூர்வாரி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்